சேலம்: 9 வயது சிறுமி மர்ம மரணம்.. வீட்டில் தூக்கிட்டு நிலையில் சடலம் மீட்பு.!
Salem Child Mystery Death Police Investigation 1 August 2021
சேலம் மாவட்டத்தில் உள்ள கொங்கணாபுரம் கச்சுப்பள்ளி கிராமத்தின் கோவலன்காடு வலசு பகுதியை சார்ந்தவர் கணேசன். இவரது மனைவி பிரியா (வயது 33). இந்த தம்பதிக்கு சாருநிதி என்ற 9 வயது மகள் இருக்கிறார்.
கடந்த சில வருடத்திற்கு முன்னதாக கணேசன் உயிரிழந்துவிட்ட நிலையில், பிரியா தனது மகளுடன் வசித்து வருகிறார். மகளுடன் வசித்து வந்த பிரியா அங்குள்ள பஞ்சு ஆலையில் பணிக்கு சென்று வந்துள்ளார். சாருநிதி நடுநிலைப்பள்ளியில் 4 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
தற்போது கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில், சிறுமி சாருநிதி வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், பிரியா நேற்று வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், வேலை முடிந்து வருகையில், மகள் சாருநிதி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர், இந்த விஷயம் தொடர்பாக கெங்கணாபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சாருநிதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுமியின் மர்ம மரணம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Salem Child Mystery Death Police Investigation 1 August 2021