#Breaking: நுங்குவெட்டி கொடுப்பதாக கூறி, 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை.. சேலத்தில் பயங்கரம்.!!
Salem Child girl Sexual abuse and Murder Police Investigation 1 May 2021
9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் மாட்டையாம்பட்டியை சார்ந்த 9 வயது சிறுமி, பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமி தற்போது பள்ளிக்கு செல்லாமல், கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், இதே பகுதியில் தனபால் என்ற கொடூரன் வசித்து வந்துள்ளான். இவன் இன்று சிறுமிக்கு நுங்கு வெட்டிக்கொடுப்பதாக அழைத்து சென்ற நிலையில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இதனால் சிறுமிக்கு அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்டதாக தெரியவருகிறது. சிறுமி துடிதுடித்து உயிரிழந்த நிலையில், பெற்றோர்கள் தங்களின் மகளை காணாது அங்குள்ள பகுதிகளில் தேடியுள்ளனர். இதன்போது, காமுகன் தனபால் சிறுமியை அழைத்து சென்றதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சிறுமியை அப்பகுதியில் தேடுகையில், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இரத்தம் வெளியேறி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். பின்னர் இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக உள்ளுர் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Salem Child girl Sexual abuse and Murder Police Investigation 1 May 2021