எட்டு வழி சாலை குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்!! தற்போது சேலத்தில்..!
salem bridge open by cm
சேலத்தில் ஈரடுக்கு மேம்பாலத்தை திறக்க சென்ற முதல்வர், அப்போது உரையாற்றினார். அந்த உரையில் அவர் தெரிவித்ததாவது:-
உலகத்தரத்திற்கு ஏற்ப சாலைகளை உருவாக்கவே மத்திய அரசு 8 வழிச்சாலை திட்டத்தை அறிவித்தது. நீதிமன்றத்தின் மூலம் நல்ல தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
மக்களின் வசதிக்காகவே 8 வழிச்சாலை திட்டம் கொண்டுவரப்படுகிறது. தனிநபரின் வசதிக்காக அல்ல இதில் ஏதுமில்லை. தமிழகத்தை போக்குவரத்து நெரிசல் இல்லாத மாநிலமாக உருவாக்க தான் இந்த திட்டங்களை நடைமுறை படுத்த படுகிறது.
சேலம் அருகே 60 ஏக்கர் பரப்பளவில் பஸ்போர்ட் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மக்களிடம் இருந்து நிலங்களை பறித்து 8 வழிச்சாலை திட்டத்தை அவர்களிடம் திணிக்க மாட்டோம்" என முதல்வர் உறுதியளித்துள்ளார்.
இந்த விழாவில் கலெக்டர் ரோகிணி, மற்றும் திமுக எம்பி எம் எல் ஏ கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.