ஏ.டி.எம் மையத்திற்குள் கம்பியுடன் நுழைந்த நபர்.. கனபொழுதில் கதறிக்கொண்டே ஓடிய சம்பவம்.!
Salem ATM Theft Attempt Police Investigation
சேலம் அருகே இந்தியன் வங்கி ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் இரும்பாலை மோகன் நகர் பகுதிகள் இந்தியன் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. நள்ளிரவில் ஏ.டி.எம் மையத்திற்குள் நுழைந்த வாலிபர் ஒருவர் தான் வைத்திருந்த கத்தி மற்றும் இரும்பு கம்பியால் ஏ.டி.எம் எந்திரத்தை உடைக்க முயற்சித்துள்ளார்.
அப்போது ஏ.டி.எம் மையத்திற்குள் இருந்த அலாரம் அடிக்க தொடங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் அங்கு வருவதை கண்ட இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவம் குறித்து இந்தியன் வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Salem ATM Theft Attempt Police Investigation