200க்கு பதில் 500 வந்ததால் போட்டி போட்டு பணத்தை எடுத்த சென்ற வாடிக்கையாளர்கள்.!
salem atm machine problem
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்காவிற்கு உட்பட்ட பண்ணப்பட்டியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி இயங்கி வருகிறது. இந்த வாங்கில் உள்ள ஏடிஎம் ஒன்றில், 200 ரூபாய்க்கு பதில் 500 ரூபாய் வந்துள்ளது.
இதையடுத்து, 200க்கு பதில் 500 வந்ததால் வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு ஏடிஎம்மில் பணத்தை எடுத்து சென்றுள்ளனர்.
இது தொடர்பாக தகவலறிந்த வந்த எஸ்.பி.ஐ வங்கி அதிகாரிகள், பணம் மாறி வந்த பண்ணப்பட்டி ஏடிஎம் மையத்துக்கு பூட்டு போட்டனர். 200 ரூபாய் வைக்க வேண்டிய ரேக்கில் ரூபாய் 500 வைக்கப்பட்டதே பணம் மாறி வந்த கோளாறுக்கு காரணம் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், ரேக் மாறி பணத்தை வைத்த தனியார் நிறுவனமே பண இழப்புக்கு பொறுப்பு என அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary
salem atm machine problem