21 குண்டுகள் முழங்க, இராணுவ மரியாதையுடன் மதியழகனின் உடல் அடக்கம்..!!
Salem Army Officer Mathiazhagan end Funeral
பாகிஸ்தான் தாக்குதலில் வீரமரணம் அடைந்த சேலம் மாவட்டம் எடப்பாடி சேர்ந்த மதியழகன் என்பவர். காஷ்மீரில் உள்ள கிராமங்களையும், வீரர்களையும் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தில் சந்தெர்பானி எல்லைப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் நேற்று முன் தினம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதனையடுத்து இந்திய தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.
சில மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கி சூட்டில் மதியழகன் பலத்த காயம் அடைந்தார். இதனையடுத்து அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி மதியழகன் உயிரிழந்தார்.
இதனையடுத்து தனி விமானம் மூலமாக இராணுவ அதிகாரி மதியழகனின் உடல் தமிழகம் வந்தடைந்தது. இதன்பின்னர் சொந்த ஊருக்கு மதியழகன் உடல் கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தற்போது மதியழகனின் இறுதி சடங்கு நிறைவுபெற்று, 21 குண்டுகள் முழங்க, முழு இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செயப்பட்டது.
Tamil online news Today News in Tamil
English Summary
Salem Army Officer Mathiazhagan end Funeral