ஏர்போர்ட் மூலம் பிடிபட்ட தலைமறைவு குற்றவாளி..! சென்னையில் அடுத்தடுத்த ருசிகர உண்மைகள்.! - Seithipunal
Seithipunal


சார்ஜாவிற்கு சென்னை விமான நிலையத்திலிருந்து செல்கின்ற ‌ ஏர் அரேபியா விமானம் காலை 3.50 மணிக்கு புறப்பட காத்திருந்தது. அப்பொழுது சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பயணிகளின் ஆவணங்களை சரிபார்த்து கொண்டிருந்தனர்.

சார்ஜா செல்வதற்காக சேலத்தை சேர்ந்த 34 வயது நபர் சதீஷ்குமார் என்பவர் வந்துள்ளார். அவரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் பரிசோதனை செய்த பொழுது சேலம் மாநகர அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் பல்வேறு வழக்குகள் பதிவாகி இருக்கிறார் என்றும் அவர் தலைமறைவு குற்றவாளி என்பதும் தெரியவந்துள்ளது. 

மேலும் ஏற்கனவே சதீஷ்குமாரை தேடப்படும் குற்றவாளியாக சேலம் மாநகர காவல் ஆணையர் அறிவித்து இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து சர்வதேச விமான நிலையங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டிருந்த நிலையில் அவர் காவல்துறைக்கு பயந்து வெளிநாடு தப்பி ஓட முயற்சிப்பது தெரியவந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து சதீஷ்குமார் பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்து குடியுரிமை அலுவலக அறையில் அவரை அடைத்து வைத்தனர். உடனடியாக சேலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்து குற்றவாளி சதீஷ்குமாரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem Aquest got in Chennai airport


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->