சேலம்: 60 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் கொலை.. ஆடு மேய்க்க சென்றவருக்கு அரங்கேறிய சோகம்.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் அரியாம்பட்டி பகுதியை சார்ந்தவர் அய்யனார். இவரது மனைவி இலட்சுமி (வயது 60). லட்சுமி தனது கணவரை பிரிந்து, கடந்த 10 வருடமாக மல்லூர் பகுதியில் உள்ள சிறிய வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த வீடு காட்டுப்பகுதியினை ஒட்டிய நெடுஞ்சாலையில் தனியாக இருக்கிறது. 

இந்த பகுதியில் கல்குவாரியும் செயல்பட்டு வரும் நிலையில், தினமும் கூலி தொழிலுக்கு குவாரிக்கு சென்று வந்துள்ளார்.. நாளடைவில் கூலி பணிகளுக்கு குவாரியில் ஆட்கள் நியமனம் செய்யப்படாததை அடுத்து, ஆடு மற்றும் மாடு வளர்த்து வந்துள்ளார்.

நேற்று வழக்கம்போல காலை நேரத்தில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற நிலையில், இரவு ஆடு மற்றும் மாடுகள் வீட்டிற்கு திரும்பியுள்ளது. ஆனால், இலட்சுமி வீட்டிற்கு திரும்பாததால், சந்தேகமடைந்த உறவினர்கள் அங்குள்ள பகுதியில் தேடியுள்ளனர். 

இதில், லட்சுமி ஆடைகள் களைந்த நிலையில், அரைநிர்வாண கோலத்தில் பிணமாக இருந்துள்ளார். பின்னர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இலட்சுமியை மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை கண்டறிந்துள்ளனர். 

அவர் அணிந்திருந்த நகைகளும் மாயமாகியுள்ள நிலையில், இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 60 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem 60 Year Old Lady Sexual abuse and Murder Police Investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->