தமிழக அரசு பள்ளியில் சச்சின் செய்த நெகிழ்ச்சியான காரியம்.! மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்ற மாணவர்கள்.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வருகைப்புரிந்து அப்பள்ளி மாணவ, மாணவிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு பூங்காவை பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நேரில் வருகை தந்து பார்வையிட்டார். 

இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக மாணவ, மாணவிகள் வரவேற்பு பதாகைகளை ஏந்தியவாறு  சச்சின் டெண்டுல்கரை உற்சாகத்துடன் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுடனும், தனியார் நிறுவன ஊழியர்களுடனும் சச்சின் டெண்டுல்கர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

சச்சின் டெண்டுல்கர் புகைப்படம் எடுத்துக் கொண்ட மாணவர்கள் மிகுந்த உற்சாகத்தில் காணப்பட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sachin tendulkar meet with government school student


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->