ஆர்எஸ்எஸ் முகாமில் கல் எறிந்த இஸ்லாமியர்கள்!! நாகையில் 6 பேர் கொண்ட கும்பல் கைது!!
rss camp attacked by six muslims are arrested
நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமில் பாதுகாப்பு பணியில் இருந்த பொறுப்பாளர் ஒருவரை கல்வீசி தாக்கிய விவகாரத்தில் புகாரின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் நடத்தப்பட்டுவருகிறது.
அந்த முகாமில் இரவு நேரத்தில் துரை சண்முகம் என்பவர் முகாமை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் துரை சண்முகத்தை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியும், கற்களை வீசி தாக்கியும் உள்ளனர்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்மநபர்களை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். விசாரணையில், ஜாசிக், முகமது சபிக், முகமது அல்பா உளிள்ட்ட 6 பேர் கொண்ட கும்பலை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
English Summary
rss camp attacked by six muslims are arrested