எனக்கு அந்த கட்சியில் இணைய விருப்பம் - ரவுடி பேபி சூர்யாவின் அறிவிப்பால் அதிர்ச்சி.!
Rowdy Baby Surya Wish to Join ADMK
டிக் டாக் உலகில் மிகவும் பிரபலமான பெண்மணியாக இருந்து வந்தவர் ரவுடி பேபி சூர்யா. சூர்யா என்ற பெயரை வைத்துக்கொண்டு, ரவுடிபேபியாக தன்னை அடையாளப்படுத்திய நிலையில், இவரை வைத்தும் மற்றொருவரை சேர்த்து வைத்தும் பல மீம்ஸ்களும், வீடியோக்களும் அடுத்தடுத்து வெளியாக, அவரது குடும்பத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த நிலையில், இவரின் நடவடிக்கை காரணமாக சூர்யாவை அவரது கணவர் விவாகரத்து செய்த நிலையில், சூர்யா தனது குழந்தைகளுடன் திருப்பூரில் வசித்து வந்தார். இதன் பின்னர் டிக் டாக் செயலியையும் மத்திய அரசு தடை செய்து அறிவித்ததை தொடர்ந்து, டிக் டாக் போல இருக்கும் பிற செயலிகளில் கணக்கு தொடங்கி வீடியோ பதிவு செய்து வந்தார்.
டிக் டாக் செயலி இருக்கும் போதே பல்வேறு அலப்பறைகளை கூட்டி, தற்கொலை முடிவிற்கு சென்ற நிலையில், தற்கொலை வேண்டாம் என்றும் பலரும் தெரிவித்தனர். இதனையடுத்து எனக்கு ரூ.5 இலட்சம் பணம் வேண்டும் என்றும், பணம் கொடுத்தால் நான் தற்கொலை செய்துகொள்ள மாட்டேன் எனவும், எனது குடும்பத்தை பார்த்துக்கொண்டு நிம்மதியாக இருப்பேன் என்றும் தெரிவித்து ஆறுதல் கூறிய பலரையும் அதிரவைத்திருந்தார். தற்போது ரவுடி பேபி சூர்யா தினேஷ் என்பவருடன் குடித்தனம் நடத்தி வருவதாக தெரியவருகிறது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக சன் ஸ்பா என்ற பெயரில் விபச்சார விடுதி நடத்தி வருவதாக கைது செய்யப்பட்ட தினேஷ் மற்றும் சூர்யா ஜாமினில் வெளியே வந்தனர். சூர்யாவிடம் டிக் டாக் செயலி மூலமாக சகோதரத்துவத்துடன் பழகி பல பிரச்சனைகளை சந்தித்த உடன்குடியை சார்ந்தவர் சூர்யாவிற்கு பல அறிவுரைகள் கூறிய நிலையில், அதனை ஏற்றுக்கொள்ளாது அவரையே தரம்தாழ்த்தி விமர்சிக்க தொடங்கினர். இந்நிலையில், சூர்யா அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Rowdy Baby Surya Wish to Join ADMK