மதுபான கடைகளில் திருட்டு!! போலீசார் வலைவீச்சு!! - Seithipunal
Seithipunal


திருமங்கலம் அருகே உள்ள ஆஸ்டின்பட்டியில் உள்ள டாஸ்மார்க்கில் பொன்னம்பட்டியைச் சேர்ந்த போதுமணி, நல்ல பிள்ளை பட்டியை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகின்றனர். இரவு வியாபாரம் முடிந்து 2 பேரும் வீட்டுக்கு புறப்பட தயாரானார்கள்.

கடையை பூட்டும்போது அங்கு முகமூடி அணிந்து பட்டாகத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் 7 பேர் கொண்ட மர்ம கும்பல் மணி சிவக்குமார் மற்றும் காவலாளி, முருகன் ஆகியோரை அரிவாளால் வெட்டியுள்ளது.

பின்னர் ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்தை கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையடித்தனர். அங்கிருந்த சி.சி.டி. கேமரா வயர்களை துண்டித்து ஹார்ட் டிஸ்க்குடன் தூக்கிச் சென்றுள்ளநர்.

காயமடைந்தவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்பேரில் 3 தனிப் படை அமைக்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்த ஊழியரின் செல்போனையும் திருடி சென்றுள்ளனர். எனவே, அதை வைத்து அந்த மர்ம கும்பலை போலீசார் கண்டு பிடித்துள்ளனர். சிலர் தலைமறைவாகியுள்ளார். அவர்களை தேடி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

robbery in tasmac


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->