வேலைமுடிந்து ஸ்கூட்டியில் விடுதிக்கு சென்ற பெண்ணிடம் கொள்ளை!! போரூரில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!
robbery in porur
ராமாபுரம் இன்ஸ்பெக்டர் கவுதமன் மற்றும் போலீசார் கிண்டி, போரூர் டிரங்க் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அவ்வழியே, மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த வாலிபர் புது பெருங்களத்தூர், பாரதி நகர், கருமாரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுரேஷ் கண்ணன் என்பதும், சில நாட்களுக்கு முன்பு அரும்பாக்கத்தில் வெட்டி கொலை செய்யப்பட்ட குமரேசன் என்பவரின் நண்பர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து சுரேசை போலீசார் கைது செய்தனர். சுரேஷ் பல்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவரிடமிருந்து சவரன் செயின், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து சாப்ட்வேர் நிறுவன ஊழியராண சுதாராணி என்பவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.
சோழிங்கநல்லூரை சேர்ந்த சுதாராணி பணிமுடிந்து தங்கி இருந்த விடுதிக்கு சென்ற போது கைப்பையை பறித்து சென்றுள்ளனர். அதில், பணம், விலை உயர்ந்த செல்போன் உள்ளிட்டவை இருந்துள்ளது.
இது தொடர்பாக,செம்மஞ்சேரி போலீசார் துரைப்பாக்கம் ராஜீவ் நகரை சேர்ந்த அருண்குமார் மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.