உளவுத்துறை காவலர் வீட்டுக்கே உலை வைத்த கொள்ளையர்கள்?! வெளியான அதிர்ச்சி தகவல்!! - Seithipunal
Seithipunal


சென்னை டிஜிபி அலுவலகம் அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் சிறப்பு உதவி ஆய்வாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை, 50 ஆயிரம் ரூபாய் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் மயிலாப்பூரில் உள்ள காவலர் குடியிருப்பில் உள்ள வீட்டில்  வாசு என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 
டிஜிபி அலுவலகத்தில் உள்ள உளவுத்துறை கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு உதவி ஆய்வளராக வாசு பணியாற்றி வருகிறார்.  நேற்று வாசுவின் மனைவி அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார், வாசு வழக்கம் போல பணிக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் டிஜிபி அலுவலகத்தில் பணியை  முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த வாசு, வீட்டின் கதவுகள் உடைக்க பட்டு இருப்பதை கண்ட வாசு அதிர்ச்சி அடைந்தார், வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவின் பூட்டை உடைத்து உள்ளே  இருந்த 25 சவரன் நகை, 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடிக்கப்பட்டது கண்ட காவலர் வாசு அதிர்ச்சியடைந்தார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாசு புகார் அளித்தார்  இதனையடுத்து போலீசார் கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

robbery in police house


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->