மயிலாடுதுறையில் கொள்ளை சம்பவம்! கொள்ளைப்புறமாக வந்த கொள்ளையர்கள்! வீடியோ!  - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை  - 14.10.19 : 

மயிலாடுதுறையில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 7 பவுன் நகை 2கிலோ வெள்ளி பொருட்கள் திருடபட்டுள்ள சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 

நாகை மாவட்டம் மயிலாடுதுறை திருவிழந்தூர் மேலவீதியில் மனைவி ருக்மணியுடன் வசித்து வருபவர் கோபால் அய்யர். இவர் கடந்த மாதம் 28ம் தேதி சென்னையில் வசிக்கும் மகன் வீட்டிற்கு மனைவியுடன் சென்று தங்கியுள்ளார். 

அதன்பின் 15 நாட்களுக்கு பிறகு நேற்று இரவு மயிலாடுதுறை திருவிழந்தூர் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 7 பவுன் நகை மற்றும் 2 கிலோ அளவிலான வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடியுள்ளது தெரிய வந்தது.

இதுகுறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் கோபால் அய்யர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆளில்லாத வீட்டில் நடைபெற்றுள்ள கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

செய்தியாளர் : மணி  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

robbery in mayiladuthurai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->