பாம்பிற்கு பயந்து பக்கத்து வீட்டில் தூக்கம்.! திரும்பி வந்தவருக்கு காத்திருந்த துக்கம்.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டதில் உள்ள மணப்பாறை அருகில் காட்டுப்பட்டி காமராஜர் நகரை சேர்ந்தவர் மரிய செல்வம், இவர் அரசு பள்ளியில் ஆசிரியை ஆக பணியாற்றுகிறார். நேற்று அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார், இந்த நிலையில் இரவு நேரத்தில் சாரைப் பாம்பு ஒன்று, அவரது வீட்டுக்குள் புகுந்தது.

பாம்பை கண்டத்துடன் மரியசெல்வம் கூச்சலிட்டிருக்கிறார், இதை அடுத்து அக்கம்பக்கத்தினர் வந்து பாம்பை வெளியே துரத்தினார்கள். பாம்பை பார்த்த அதிர்ச்சியில் இருந்த மரிய செல்வம் தனியாக தூங்குவதற்கு பயந்து அருகில் உள்ள வீட்டிற்கு சென்றார்.

அதற்குமுன், பீரோவுக்குள் இருந்த 70 சவரன் தங்க நகை மற்றும் 45 ஆயிரம் ரூபாய் பணத்தை சாக்குப்பையில் கட்டி பீரோவுக்கு அடியில் பழைய பொருட்கள் வைப்பதுபோல் வைத்து விட்டு சென்றிருக்கிறார்.

இன்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு உள்ளே சென்று பார்த்தபோது சாக்குப்பையோடு நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த மணப்பாறை டி.எஸ்.பி குத்தாலலிங்கம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

robbery in manapaari


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->