நரிக்குறவர் வேடத்தில் வந்து நாசுக்காக நகைகளை பறித்த கொள்ளையர்கள்..! - Seithipunal
Seithipunal


தமிழக்தின், கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகில் நரிக்குறவர் போல் வேடம் தரித்து கொண்டு வந்த ஆணும் பெண்ணும் நூதன முறையில்  பெண்களிடம் 10 சவரன் நகையை பறித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், எடையூரைச் சேர்ந்தவர் விஜயா மற்றும் அவரது மருமகள் பிரியாவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த நரிக்குறவர் பெண் ஒருவர், இவர்களிடம் சகஜமாகப் பேச்சு கொடுத்தவாறு தனது மகன் நாட்டு வைத்தியர் எனக் கூறியுள்ளார். அதனை நம்பி கை, கால் வலிப்பதாகக் கூறி அவனை வரச்சொல்லுமாறு விஜயா கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து, திங்கட்கிழமை அன்று வீட்டுக்கு வந்த இளைஞன் ஒருவன், அங்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி பூஜை செய்வது போல் நடித்திருக்கிறேன். சிறிது நேரத்தில் விஜயா மீதும் பிரியா மீதும் மயக்கப் பொடியைத் தூவி, தாலி, தோடு உட்பட 10 சவரன் நகையை பறித்துச் சென்றுள்ளான். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

robbery in kadalur district


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->