திருநங்கை போல வேடமிட்டு இளைஞரிடம் செய்த மோசமான காரியம்.!
robbery in coimbature
கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே நின்ற இளைஞரை திருநங்கைகள் இருவர் பணம் கேட்டு மிரட்டி அவர்களை தாக்கி பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து அந்த இளைஞர்கள் அளித்த புகாரின் பேரின், இது தொடர்பான விசாரணையில் ஈடுப்பட்ட போலீசார் இளைஞரை மிரட்டியது திருநங்கைகள் இல்லை திருநங்கைகள் போல வந்த இளைஞர்கள் என்பதை கண்டுப்பிடித்துள்ளனர்.
இந்த சம்பவம் மட்டும் இல்லாமல் இது போன்ற பாணியில் திருநங்கைகள் போல் நடித்து இதற்கு முன் பல திருட்டுச் சம்பம் இடம்பெற்றுள்ளது தெரியவந்தது. அழகிய பெண்கள் போல வந்து காவல்துறையே கத்தி கலங்க வைத்துள்ளனர்.
மேலும், திருநங்கைகள் போல நடித்து பல திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாது கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மற்றும் மணி என தெரியவந்துள்ளது.
இதையயடுத்து ஆனந்தன் மற்றும் மணியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதற்கு பதிலளித்த அவர்கள் திருநங்கைகள் வேடமணிந்து பணம் பறித்தால் யாரும் புகார் செய்ய மாட்டார்கள் என நினைத்து இவ்வாறு செய்ததாக அவர்கள் வாக்கு மூலம் வழங்கியுள்ளனர்.