கன்னியாகுமரி: கோவிலில் மர்ம நபர்கள் கொள்ளை...!
Robbery at the temple
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அடுத்துள்ள சோழபுரம் பகுதியில் கண்ணாத்து சுடலை மாடன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழக்கம் போல பூஜை முடித்து விட்டு பூசாரி மாலையில் கோவிலை பூட்டு விட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில், இன்று காலை கோவில் வழியே சென்ற பொதுமக்கள் கோவிலில் உள்ள சிலைகள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், ஊர் தலைவருக்கும் ஊர் மக்களுக்கும் அங்கு வந்து பார்த்தனர்.
அவர்கள் அங்கு வந்து பார்த்த போது கதவு உடைக்கபட்டு சாமிக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்களை எடுத்து சென்றுள்ளனர். மேலும், கோவிலில் உள்ள உண்டியல் உடைத்து அதில் இருந்த பணமும் கொள்ளையடிக்கபட்டிருந்தது. உடைக்கப்பட்ட பூட்டுகள் அருகில் இருந்த வயல்வெளிகளில் கண்டெடுக்கப்பட்டன.
இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.