வாகன ஓட்டிகளிடம் கொள்ளையடிக்கும் போலி அதிகாரிகள்.! உஷார்..!  - Seithipunal
Seithipunal


திருவள்ளூரை அடுத்து  இருக்கும் காக்களூர் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர் என்று பொய் கூறி அந்த வழியே வரும் வாகன ஓட்டிகளிடம் பணம் பறிப்பதாக திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆன விஜயபாஸ்கர்னுக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர் திருவள்ளூர் தாலுகா காவல் துறையினருக்கு இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர், வாகன ஓட்டிகளிடம் பணம் பறித்து வந்த அந்த நபரை கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.

மேலும், அவரிடம் வட்டார போக்குவரத்து அலுவலர் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த பொற்செல்வன் என்பது தெரியவந்துள்ளது.

மேலும், அவர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

robbery as Government officer in thiruvallur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->