சாப்ட்வெர் இன்ஜினியர் வீட்டிலேயே ஸ்மார்ட்டாக புகுந்த கொள்ளையர்கள்!! கொளத்தூர் அருகே பரபரப்பு!! - Seithipunal
Seithipunal


கொளத்தூரில் உள்ள ஜெயராமன் நகரில் 7-வது தெருவைச் சேர்ந்தவர் தயாளன். இவர் சோழிங்கநல்லூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று காலை, அவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று இருந்தார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த, மர்ம நபர்கள் வீட்டில் நுழைந்து  கொள்ளையடித்து சென்று உள்ளனர். 

பின்னர் மாலையில் திரும்பி வந்த போது, வீட்டு பூட்டு உடைந்து கிடந்தது. அதை பார்த்து, அதிர்ச்சியடைந்து வீட்டை திறந்து பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 30 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது . 

இது குறித்து தயாளன் அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரின் பேரில் ராஜமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Robbery


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->