திருவாரூர் அருகே இன்று அதிகாலை நடந்த விபத்து! பலியான உயிர்கள்! - Seithipunal
Seithipunal


இன்று அதிகாலை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது, இறைச்சி கோழிகள் ஏற்றி வந்த வேன் மோதி விபத்துக்குள்ளானதில், மாற்று ஓட்டுநர் உட்பட 4 பேர் சம்பா இடத்திலேயே உயிர் இழந்து உள்ளனர். 

கரூர் மாவட்டத்தில் இருந்து ஜல்லி ஏற்றிக் கொண்டு, திருவாரூரில் இருந்து மன்னார்குடிக்கு லாரி புறப்பட்டது. அந்த லாரி இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை என்ற இடத்தில்,சாலை ஓரமாக நிறுத்தி, லாரியின் ஓட்டுநர் நாகராஜ் சக்கரத்தில் காற்றின் அளவினை பரிசோதனை செய்து கொண்டிருந்தார்.

அந்நேரம், கோவை மாவட்டம் பல்லடத்திலிருந்து திருந்துறைப்பூண்டிக்கு இறைச்சி கோழிகளை ஏற்றிக் கொண்டு வந்த வேன், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையேரம் நின்ற அந்த லாரியின் பின் பக்கம் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனின் இருந்த மாற்று ஓட்டுநர் கந்தன் (25), தொழிலாளர்கள் 3 பேர் உட்பட மொத்தம் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

road accident near mannarkudi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->