ரெட்டமலை சினிவாசன் பேத்தி, விசிக மீது பரபரப்பு குற்றசாட்டு.. போராட்டம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


நான் அயோத்திதாசன் இரட்டைமலை ஸ்ரீனிவாசன் பேத்தியான ரேவதி நாகராஜன், ஆகிய நான் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்களால் பணமோசடி செய்யப்பட்டு மிகுந்த துயரை அனுபவித்துள்ளோம். 

மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது எங்களின் பூர்வீக சொத்தை விற்பனை செய்த நேரம். இதில் எனது மகளின் திருமணம் இருந்ததால், அவசரமாக பணம் தேவைப்பட்டது. திருவண்ணாமலை நமக்கு பூர்வீகம் என்பதால் அங்கு பல நபர்களின் பழக்கம் ஏற்பட்டது. 

அந்த வகையில், திருவண்ணாமலை பகுதியை சார்ந்த விடுதலை சிறுத்தை கட்சி ஊடகத்துறை கல்யாண சுந்தரம் என்ற நபர், பணமதிப்பிழப்பால் சிக்கிய பணத்தை பெற்று தருவதாகவும், தனது அண்ணாமலை பில்டர்ஸில் ரூ.2 கோடி போட்டாலும் உடனே எடுத்துவிடலாம் என்றும், பணத்தை தன்னிடம் கொடுத்தால் மகள்களின் திருமணத்தை நடத்தி தருவதாகவும் கூறினார். 

இதன்பின்னர், 8 வருட பழக்கத்தின் அடிப்படை காரணமாக திருமணம் ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், வீடு வாங்கி விற்பனை முறையில் பணத்தை அபகரிக்க முடிவு செய்து, பல வார்த்தைகள் கூறி ரூ.21.5 இலட்சம் முதலில் வழங்கிய நிலையில், தொடர்ந்து ஒரு வருடம் கடந்தது தான் பாக்கி என்பது தான் மிச்சம். தொடர்ந்து ஏமாற்றி எனது இரண்டு பெண் குழந்தைகளுக்கும் எளிமையான முறையில் திருமணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. 

நான் பணம் குறித்து பேசிய நேரத்திலெல்லாம் பணம் தருவதாக பேசி பேசி ஏமாற்றி வந்தார். இந்த நிலையில், விடுதலை கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் பல நிர்வாகிகள், முக்கிய பொறுப்பாளிகளையும் பல வருடமாக சந்தித்து வந்த நிலையில், எந்த விதமான புண்ணியமும் இல்லை. இவர்கள் பல ஊர்களில் கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதால் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தும் பலனில்லை. 

மேலும், திருமாவளவனும் அவரை காணும் நேரமெல்லாம் பல வேலைகளுக்கு எனது சொந்த பணத்தை செலவழிக்க வைத்தார். அதனையும் செய்த சூழ்நிலையில், எந்த விதமான பலனும் இல்லை. பின்னர் காவல் துறை டி.எஸ்.பியிடம் புகார் அளித்ததன் பேரில், விசாரணை மேற்கொண்டு காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர். 

3 மாதம் கழித்து தருவதாக எழுதி வாங்கிய நிலையில், பணம் வரவில்லை. மீண்டும் காவல் நிலையத்திற்கு வரவழைக்கையில் காலாவதியான முன்ஜாமீன் பட்டியலை வழங்கி தப்பி செல்ல நினைத்தனர். இந்த விஷயங்கள் நடைபெற பல வருடங்கள் ஆகிய நிலையில், வி.சி.க கட்சியினர் தினமும் என்னிடமே பஞ்சாயத்து செய்தனர். இவர்களின் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. விசிக தலைவருக்கு இந்த விஷயம் தெரிந்தும் நடவடிக்கை இல்லை.

இப்போதுள்ள கொரோனா சூழ்நிலையால் ரூ.5 ஆயிரம் வாடகை வீட்டில், கடந்த 5 மாதமாக வாடகை பாக்கியுடன் இருக்கிறேன். என்னைப்போன்று பலரும் வி.சி.க கட்சியினரால் ஏமாற்றப்பட்டுள்ளனர். எனக்கு எனது பணம் வேண்டும். நான் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் சாகும் வரை இரட்டைமலையாரின் நினைவு மண்டபத்தில் உண்ணாவிரதம் இருக்க போகிறேன். என் தாத்தாவின் பெயரை வைத்தே இவர்கள் எங்களின் குடும்பத்தை ஏமாற்றி வருகின்றனர். நான் உண்ணாவிரதம் இருப்பது உறுதி என்று கூறியுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rettamalai Srinivasan Sibblings Revathi Nagarajan complaint VCK party


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->