கருணாநிதியின் நண்பர் காலமானார்.. சோகத்தில் ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எஸ் மோகன் (வயது 90) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் கடந்த 1956 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியைத் தொடங்கினார். 

அதன் பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். 1995 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற இவர், சட்டம் சார்ந்த பல நூல்களை எழுதியுள்ளார். 

இவர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடலுக்கு பல அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் நீதிபதி மோகன் உடலுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் திமுக பொருளாளர் துரைமுருகன், திமுக டி ஆர் பாலு ஆகியோர் உடனிருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

retired supreme court judge mohan passes away


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->