காப்பாற்றச் சென்ற தீயணைப்பு வீரர் மயக்கம்.! சிக்கியவர்கள் செய்த சிக்கலால் கொத்தாக போன உயிர்கள்.!  - Seithipunal
Seithipunal


கிணற்றுக்குள் விஷவாயு தாக்கியதால் உள்ளே மயங்கிய வாலிபர்களை காப்பாற்ற சென்ற தீயணைப்பு வீரர் பலியாகிய சம்பவம் பெரம்பலூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெரம்பலூர் மாவட்டம், செல்லியம்பாளையம் கிராமத்தில் பாஸ்கர் மற்றும் ராதாகிருஷ்ணன் என்ற இரண்டு வாலிபர்கள் கிணற்றுக்கு வெடி வைக்க முயன்றுள்ளனர். இதில், விஷவாயு தாக்கி அவர்கள் மயக்கம் அடைந்துள்ளனர். 

இதனை தொடர்ந்து, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்று காப்பாற்ற முயன்றுள்ளனர். தீயணைப்பு துறையினரிடம் வெடிவைத்த தகவல் குறித்து யாரும் கூறாததால், ராஜ்குமார் என்ற வீரர் உடனடியாக கிணற்றுக்குள் இறங்கி இருக்கின்றார். 

இதில், விஷவாயு தாக்கி அவரும் மயங்கி இருக்கிறார். அதற்கு முன்பாகவே, பாஸ்கரை காப்பாற்ற அவர் மேல் கயிற்றை கட்டி அனுப்பி உள்ளார். ஆனால், ராஜ்குமாரும், ராதாகிருஷ்ணனும் கிணற்றிலேயே மயங்கியிருக்கின்றனர். 

இதில் அதிர்ச்சி அடைந்த தீயணைப்பு வீரர்கள் ஒன்று சேர்ந்து ராஜ்குமாரை மேலே தூக்கி இருக்கின்றனர். இருப்பினும் ராஜ்குமாரும், ராதாகிருஷ்ணன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரை விட்டுள்ளனர். மற்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாஸ்கர் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rescue team member died in well 


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->