8 மாவட்டங்களுக்கு மழை.. கொண்டாட்டத்தில் மக்கள்..!!
Regional Meteorological center announce rain for 8 District in Tamilnadu
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவ காற்று காரணமாக வரும் 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தின் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரியில் மிதமான மழை பெய்யலாம் என்றும், நெல்லை, தூத்துக்குடியில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனை போன்று மீனவர்களுக்கு உள்ள எச்சரிக்கையாக கேரள கடற்கரை, கர்நாடக கடற்கரை மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகம் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும். இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு கேரள கடற்கரை, கர்நாடக கடற்கரை மற்றும் லட்சத் தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Regional Meteorological center announce rain for 8 District in Tamilnadu