தருமபுரி மாவட்டத்தில் ரத்து செய்யப்பட்ட தேர்தல்.. மறுவாக்குப்பதிவு தேதி அறிவிப்பு.!
reelection in dharamapuri district
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் ஆனது முதல் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. பெரும்பாலான இடங்களில் அமைதியாக நடைபெற்ற தேர்தல் சில இடங்களில் சலசலப்பை உண்டாக்கியது.
நேற்று நடைபெற்ற பரபரப்பான சம்பவங்களில் தருமபுரி மாவட்டத்தில் ஒன்று நடைபெற்றிந்தது, அந்த மாவட்டத்தில் மிட்டாரெட்டிஅள்ளியில் நடைபெற்ற தேர்தலில் வாக்குசீட்டில் அங்கு போட்டியிட்ட பாமகவின் மாம்பழம் சின்னத்தினை இல்லாமல் இருந்தது. மாம்பழம் சின்னத்திற்கு பதிலாக வேறு சின்னம் கொடுக்கப்பட்டிருந்தது .
இதனையடுத்து வாக்குச்சாவடியில் எதிர்ப்பு உருவாக உடனடியாக நிலைமையை உணர்ந்த மாவட்ட ஆட்சியர் வாக்குச்சாவடிக்கு விரைந்தார். பின்னர் அங்கு மாம்பழம் சின்னம் இல்லாமல் அளிக்கப்பட்ட 7 பேரிடம் மாற்று வாக்குச்சீட்டுகள் அளிக்கப்பட்டு மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. அத்துடன் அங்கு ஏற்பட்ட பரபரப்பு முடிவுக்கு வந்தது.
இந்தநிலையில், தருமபுரி : கத்திரிப்பட்டி கிராம ஊராட்சியில் 9 வேட்பாளருக்கு பதிலாக 5 வேட்பாளர்களின் சின்னங்கள் மட்டுமே இருந்ததால் அங்கு 30-ம் தேதி நடைபெறும் மறுவாக்குப்பதிவு என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
English Summary
reelection in dharamapuri district