சென்னையில் போரூர் உட்பட சில பகுதிகளுக்கு ரெட் அலெர்ட்டா.? மாநகராட்சி விளக்கம்.!  - Seithipunal
Seithipunal


சென்னையில் இருக்கும் ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதிலும் குறிப்பாக புரசைவாக்கம், விருகம்பாக்கம், அரும்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், சாந்தோம், போரூர், ஆலந்தூர் மற்றும் கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வந்தது. 

இந்த செய்தியை சென்னை மாநகராட்சி தற்போது மறுத்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது. அந்த அறிவிப்பில், " சென்னையின் சில பகுதிகளுக்கு மட்டும் ரெட்அலர்ட் கொடுக்கப்பட்டதாக வெளியான செய்தி உண்மை இல்லை.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக சென்னையில் ரெட்அலர்ட் எதுவும் விடுக்கப்படவில்லை. எனவே, மக்கள் பயம் கொள்ள வேண்டாம்.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மாநகராட்சி ஆணையரின் இந்த அறிவிப்பிற்கு பின்னர் மேற்கண்ட பகுதிகளில் வாழும் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

red alert for some chennai areas 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->