நாவல் பழம் பறிக்க சென்ற சிறுவன் ஏரியில் பிணமாக மீட்பு., மற்றொரு சிறுவனை தேடும் பணி தீவிரம்..!!
Recovery of the body of the Missing boy in the lake
நாவல்பழம் பறிக்க சென்ற சிறுவர்கள் ஏரியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், முசிறி கிராமத்தில் வசித்து வருபவர் பழனிவேல். இவருக்கு சக்திவேல் என்ற மகன் இருக்கிறான். சக்திவேல் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9 வகுப்பு படித்து வருகிறார்.
சக்திவேலும் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பன் கமலேஷ்(11) என்ற சிறுவனும் நாவல் பழம் பறிக்க செல்வதாக நேற்று மாலை கூறி சென்றுள்ளனர். நீண்ட நேரமாகியும் சிறுவர்கள் வராததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அவரை தேடியுள்ளனர். இரவு முழுவதும் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.
இந்நிலையில், இன்று காலையில் சிறுவன் சக்திவேலின் உடல் இறந்த நிலையில் முசிறி ஏரியில் கண்டெடுக்கப்பட்டது. இதனை அடுத்து காவல்துறைக்கு தகவலளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கமலேஷ் என்ன ஆனான் என தெரியததால் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அவரை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
Recovery of the body of the Missing boy in the lake