காணாமல் போன சிறுமி.. கைகால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் சடலமாக மீட்பு..! - Seithipunal
Seithipunal


கை கால்கள் கட்டுப்பட்டு அழுகிய நிலையில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், சிவானந்தபுரம் யமுனா நகரில் தூய்மைப் பணியாளர்கள் இன்று காலை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள முட்புதரில் சாக்கு பை ஒன்று கிடந்தது. அதிலிருந்து துர்நாற்றம் இருந்ததால் சந்தேகமடைந்த அவர்கள் அந்த சாக்கை அதை வைத்து பார்த்துள்ளனர்.

அதில், அழுகிய நிலையில் கை கால்கள் கட்டப்பட்ட சிறுமியின் சடலம் இருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர். தடவியல் துறையினர் உதவியோடு உடலைப் பரிசோதனை செய்ததில் அது 15 வயது சிறுமியின் சடலம் என்பது கண்டறியப்பட்டது.

உடனே இது குறித்து விசாரணை மேற்கண்ட போது அந்த பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த 11ஆம் தேதி காணாமல் போனதாக காவல்துறையில்  புகார் அளிக்கப்பட்டு இருந்ததை உறுதி செய்தனர். சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமியின் வீட்டருகே உள்ள முட்புதரில் அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Recovery of corpse in decomposed state with limbs tied


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->