காங்கிரஸ் கட்சியை மொத்தமாக கைகழுவி அதிமுகவில் இணைந்த முக்கிய புள்ளி.! உண்டான பரபரப்பு.!
Rayapuram mano join with admk
சென்னை வடமாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவராக இருந்த ராயபுரம் மனோ தற்பிது அதிமுகவில் இணைந்து இருக்கின்றார்.
ராயபுரம் மனோ வடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவராக இருந்தவர். இவர் காங்கிரஸ் கட்சியில் கவுன்சிலராகவும், அகில இந்திய உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
கடந்த வருடம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். 10 ஆண்டுகளுக்கு மேலாக வடசென்னையில் மாவட்ட தலைவராக இருந்த மனோ அதன் பின்னர் எந்த அரசியலில் பணிகளிலும் ஈடுபாடு காட்டவில்லை.
இந்த நிலையில் ராயபுரம் மனோ இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் சென்று அதிமுகவில் இணைந்தார்.
மூப்பனார், வாசன், ஈவிகேஎஸ் இளங்கோவன். பீட்டர் அல்போன்ஸ், ஞானதேசிகன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நட்புறவில் மனோ இருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Rayapuram mano join with admk