தன்னை கடித்த கட்டுவிரீயனை டப்பாவில் போட்டு சிகிச்சைக்கு வந்த இளம் விவசாயி.!
RASIPURAM SNAKE BITE FARMER
ராசிபுரம் அருகே விவசாயி ஒருவரை கட்டுவிரியன் பாம்பு கடித்ததால், அந்த கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு விவசாயி சிகிச்சை பெற வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள தன்னைக் கடித்த பாம்பை, உயிருடன் பிடித்து அதனை ஒரு டப்பாவில் போட்டு அடைத்துக்கொண்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்த இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராசிபுரம் அடுத்த மல்லூர் பகுதியை சேர்ந்தவர் இளம் விவசாயி ராஜா. இவர் தனது நிலத்தில் விவசாய நிலத்தில் பணி செய்து கொண்டிருக்கும் போது, அவரை கட்டுவிரியன் பாம்பு கடித்து உள்ளது.
இதனை அடுத்து அந்த பாம்பை பிடித்த ராஜா, ஒரு டப்பாவில் போட்டு கொண்டு, விரைவாக அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு ராஜாவுக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றினர்.
மேலும் ராஜாவை கடித்த அந்த கட்டு விரியன் பாம்பை பாதுகாப்பாக வனத்துறையில் விட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது.
English Summary
RASIPURAM SNAKE BITE FARMER