#ராணிப்பேட்டை || மது போதையில் அராஜகம் செய்த இளைஞர்கள்.! தட்டி கேட்டவர்களுக்கு கும்மாங்குத்து.! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியில் இளைஞர்கள் சிலர் பொதுமக்களின் வாகனங்களை அடித்து நொறுக்கி கீழே தள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு அரக்கோணம் பகுதியில் ஒரு காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. 

இந்த வீடியோவில் குறித்து அரக்கோணம் நகர காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில், நரசிம்ம செட்டி தெருவில் இரண்டுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மதுபோதையில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்குவதும், அந்த இளைஞர்களுடன் சிறுவர்கள் சிலர் இணைந்து கொண்டு இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டனர் என்பது தெரியவந்தது.

மேலும், இதனை தட்டிக்கேட்ட வீட்டின் உரிமையாளர்கள், அந்த பகுதியில் இருந்த ஒரு கடையின் உரிமையாளரை அந்த இளைஞர்கள் தாக்கும் காட்சிகளும் அந்த சிசிடிவி கேமரா காட்சிகளில் பதிவாகியுள்ளது. வழக்கு பதிவு செய்த போலீசார், அதே பகுதியை சேர்ந்த 20 வயது பரசுராமன் என்ற இளைஞனை கைது செய்துள்ளனர்.

பரசுராமன் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், ஜெகன் என்ற 20 வயது இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிகிறது.

மேலும் இந்த வீடியோ காட்சியில் பதிவாகி உள்ள சிறுவர்கள் யார் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ranipettai arakonam some people attacked


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->