காலைக்கடன் கழிக்க சென்ற விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் வெட்டி படுகொலை.! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பகுதியை அடுத்த மழையூரை சேர்ந்தவர் பார்த்திபன். விடுதலை சிறுத்தை கட்சியின் பிரமுகரான இவர் ராணிப்பேட்டை நகராட்சி துணைத் தலைவர் ரமேஷ் கர்ணாவிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். 

இந்த நிலையில், அவர் இன்று வீட்டில் இருந்து செய்யாத்து வன்னான் சுடுகாடு அருகே இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது  மர்ம நபர்கள் சிலர் பார்த்திபனை கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர். 

இதனைக் கண்ட அப்பகுதியினர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். 

காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, பார்த்திபன் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணங்களால் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ranipet vck parthiban murder


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->