ராணிப்பேட்டை | டீ கடையில் ஏற்பட்ட தீ விபத்து - 5 படுகாயம்.! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டம், வானாபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் வானாபாடியில் டீ கடை வைத்து நடத்தி வருகிறார். 

இந்த நிலையில் இன்று காலை 5 மணி அளவில்  திடீரென எரிவாயு கசிவு ஏற்பட்டு தீ பற்றிக் கொண்டது. இந்த டீ விபத்தில் டீ  குடிக்க வந்த ராதாகிருஷ்ணன், வேணு, சேகர் உட்பட ஐந்து பேருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. 

இதனை அடுத்து அவர்கள் அனைவரும் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும், டீ கடையில் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் கடையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. 

இதனை தொடர்ந்து இந்த தீ விபத்து சம்பவம் குறித்து தகவலறிந்த சிப்காட் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ranipet tea shop accident


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->