தாய் வீட்டிற்கு மறுவீடு வந்த நிலையில், புதுமண பெண்ணிற்கு அரங்கேறிய சோகம்.. கண்ணீரில் குடும்பத்தினர்.!! - Seithipunal
Seithipunal


இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பெருமுகை பகுதியை சேர்ந்தவர் சினியோன் (வயது 37). இவர் அதே பகுதியில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கனிமொழி (வயது 30). 

இவர்கள் இருவருக்கும் கடந்த 5 ஆம் தேதியன்று திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில், சினியோன் மற்றும் கனிமொழி ஆகியோர் நேற்று முன்தினம் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளனர். 

அந்த நேரத்தில், கனிமொழி வீட்டின் அருகே மயங்கி விழுந்துள்ளார். இவரை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக மேல்விசாரம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

கனிமொழியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதறி அழுதது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விஷயம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த இரத்தனகிரி காவல் துறையினர், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ranipet New married girl death


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->