இராணிப்பேட்டை: போதைமறுவாழ்வு மையம் என்ற பெயரில் அராஜகம்.. சிகிச்சைக்கு சென்றவர் உயிரிழந்த பரிதாபம்.!
Ranipet Drug Rehabilitation Center youngster Death Mystery
போதை மறுவாழ்வு சிகிச்சை பெற்று வந்த இளைஞர், மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வானாபாடி மாணிக்க நகர் பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் மாணிக்கம் நகரின் துணைத் தலைவராக பதவி வகித்து வந்த நிலையில், இவருக்கு ஆரவல்லி என்ற மனைவியும், சரவணன் என்ற மகனும் உள்ளனர்.
சரவணன் அதே பகுதியில் உள்ள நியாய விலை கடையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த சில வருடங்களாகவே இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் சரவணனுக்கு சுதந்திரதேவி என்ற பெண்மணியுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
திருமணத்திற்கு பின்னரும் சரவணன் மது குடித்து வந்த நிலையில், கணவரின் குடும்பத்தினர் மற்றும் பெற்றோரின் குடும்பத்தினர் சேர்ந்து நியூ லைஃப் ஹோம் என்ற தனியார் மறுவாழ்வு மையத்திற்கு சென்று சரவணனை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கணவன் குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வருவார் என்ற நம்பிக்கையில் காத்திருந்த சுதந்திர தேவிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
நியூ லைஃப் ஹோம் சார்பில் தொடர்பு கொண்ட அலுவலக நிர்வாகி, சரவணன் திடீரென உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் பதறிப்போன குடும்பத்தினர் விரைந்து சென்ற நிலையில், மருத்துவமனைக்கு சென்றவுடன் சரவணன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சரவணன் இறப்பில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டிய நிலையில், நியூ லைஃப் ஹோம் என்ற பெயரில் அங்கு போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களை அடித்து துன்புறுத்துவதாகவும் குற்றம்சாட்டினர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பல நோயாளிகளின் உடலில் தழும்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Ranipet Drug Rehabilitation Center youngster Death Mystery