#Breaking | தமிழகத்தில் நாளை நான்கு மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை!
Ranipet chengalpattu school college leave
மழை காரணமாக நாளை ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், அடுத்து வரக்கூடிய 4 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த 3 மணி நேரத்திற்கு (7.00 pm) திருவள்ளூர் சென்னை, செங்கல்பட்டு விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக நாளை ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
English Summary
Ranipet chengalpattu school college leave