மனைவியை அபகரித்த காமுகன்... புத்திக்கூறியும் பலனில்லை.. நூதன முறையில் தற்கொலை மிரட்டல் விடுத்த கணவன்.!
Ranipet Arcot man Suicide Threating Police Rescue due to his wife Affair Person Torture
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 44). சதீஷ்குமாருக்கு திருமணம் முடிந்து ஆறு வயதுடைய மகள் உள்ள நிலையில், சதீஷ்குமாரின் மனைவிக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறி, கள்ளக்காதல் ஜோடி அவ்வப்போது உல்லாசம் அனுபவித்துள்ளது. இதனை அறிந்த சதீஷ்குமார், தனது மனைவி மற்றும் சிலம்பரசனை கண்டித்துள்ளார். இதனால் கணவன் - மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்காதலை கைவிட கூறி பலமுறை சதீஷ்குமார் மனைவியிடம் எடுத்துரைத்து பலனில்லை. உறவினர்கள் மூலமாக மனைவியை மீட்க பல முயற்சிகள் செய்தும் பலனளிக்கவில்லை. இந்நிலையில், சிலம்பரசன் மற்றும் சிலம்பரசனின் தந்தையான திரையரங்கு உரிமையாளர் ஆற்காடு ராஜா சதீஷ்குமாரை மிரட்டி வந்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த சதீஷ்குமார் வேறுவழியின்றி, அங்குள்ள ஆற்காடு சார்பதிவாளர் அலுவலகத்தில் இருக்கும் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், தனது மரணத்திற்கு காரணம் தியேட்டர் உரிமையாளர் ராஜா மற்றும் அவரது மகன் சிலம்பரசன் என்று எழுதி வைத்துள்ளார்.
இது தொடர்பாக காவல்துறையினர் காவல்துறையினர், சதீஷ்குமாருடன் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்கி வர வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Ranipet Arcot man Suicide Threating Police Rescue due to his wife Affair Person Torture