15 வயது மகளை 45 வயது நபருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு.. மகளை சித்ரவதை செய்து, மானபங்கப்படுத்திய கொடூர தாய்.!
Ranipet Arakonam Mother Force 15 Aged Child to Marriage for pay off debt Loan Issue
15 வயது சிறுமியை கடனை அடைக்க 40 வயது நபருக்கு திருமணம் செய்ய தாய் துணிந்து, மகளை கொடுமைப்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் தணிகைப்புதூர் பகுதியை சார்ந்தவர் புஷ்பா. புஷ்பாவின் கணவர் வெங்கடேசன். வெங்கடேசன் கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். புஷ்பா தனது 15 வயது மகள் மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், 15 வயது மகளை 40 வயது நபருக்கு திருமணம் செய்து வைக்க புஷ்பா ஏற்பாடு செய்துள்ளார். இந்த விஷயத்தை தெரிந்துகொண்ட சிறுமி, நான் தற்போது படித்துக்கொண்டு இருக்கிறேன், எனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த தாய் புஷ்பா, நமக்கு இருக்கும் கடனை குறித்த 40 வயது நபர் அடைத்துவிட்டு உன்னை திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறுகிறார், இதனால் நீ கட்டாயம் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.
இந்த விஷயத்திற்கு ஒத்துழைக்காத மகளை புஷ்பா கொடூரமாக அடித்து துன்புறுத்தி இருக்கிறார். மேலும், கொடூரத்தின் உச்சமாக கை, கால், முகத்தில் சூடு வைத்து, சொந்த மகளின் மேலாடையை கழற்றி வீட்டினை விட்டு வெளியே துரத்தியுள்ளார்.
இதனால் பதறிப்போன சிறுமி உறவினரின் வீட்டிற்க்கு சென்று தஞ்சம் புகவே, அவர் உடனடியாக அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சிறுமியை அழைத்து வந்து புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள தொடங்கினர்.
சிறுமி காவல் நிலையம் சென்ற தகவலை அறிந்த புஷ்பா, காவல் நிலைய வளாகத்திலேயே சிறுமிக்கு அடைக்கலம் கொண்ட சிறுமியின் உறவினரான அத்தையை அவதூறாக பேசி, சிறுமியை அங்கு வைத்தே அடித்து தாக்கினார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Ranipet Arakonam Mother Force 15 Aged Child to Marriage for pay off debt Loan Issue