தலையை தனியாக வெட்டி வீசிய பயங்கரம்.. இராமநாதபுரத்தில் வாலிபர் கொடூர கொலை.! - Seithipunal
Seithipunal


இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உச்சிப்புளி கல்கிணறு வலசை பகுதியை சார்ந்தவர் ராமு. இவரது மகன் தேவா என்கிற தேங்காய் மட்டை (வயது 24). இவருக்கும், அதே கிராமத்தை சார்ந்த கணேசமூர்த்தி என்பவருக்கும் இடையே முன்விரோத பிரச்சனை இருந்துள்ளது. 

இது தொடர்பாக அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு நம்பியான்வலசை கிராமம் அருகே தேவா நடந்து சென்றுள்ளார். இதனை நோட்டமிட்டுக்கொண்ட எதிர்தரப்பு பின்தொடர்ந்து சென்றுள்ளது. 

பின்னர், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தேவாவை வழிமறித்து அரிவாளால் வெட்டி சரமாரியாக கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் இரத்த வெள்ளத்தில் தேவா கீழே சரிந்த நிலையில், தேவாவின் கழுத்தை அறுத்து கொலை செய்து உடலை அங்கேயே போட்டுவிட்டு, தலையை புதுமடம் தாமரைக்குளம் சாலையில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த உச்சிப்புள்ளி காவல்துறையினர் தேவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து கணேசமூர்த்தி, கார்த்தி, தினேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram Youngster Murder Police Investigation 1 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->