அன்று இராமலிங்கம்.. இன்று அருண் பிரகாஷ்.. என்ன நடக்கிறது தமிழகத்தில்?.. கொந்தளிக்கும் மக்கள்.!!
Ramanathapuram Youngster Arun Prakash Murder
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வசந்த் நகர் கள்ளர் தெரு பகுதியை சார்ந்தவர் சாமிநாதன். இவரது மகன் அருண் பிரகாஷ் (வயது 22). இதே பகுதியில் வசித்து வந்த சுரேஷ் என்பவரின் மகன் யோகேஸ்வரன் (வயது 23). இவர்கள் இருவரும் நண்பர்கள்.
அருண் பிரகாஷ் மற்றும் யோகேஸ்வரன், திங்கட்கிழமை பிற்பகல் நேரத்தில் ஏ.டி.எம் மையத்தினை விட்டு வெளியே வருகையில், 9 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டனர். இரத்த வெள்ளத்தில் மிதந்த இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
பலத்த காயமடைந்த அருண் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது நண்பர் யோகேஸ்வரன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக இணையதள நெட்டிசன்கள் பதிவுப்படி, அருண் பிரகாஷ் மற்றும் அவரது நண்பர் யோகேஷவ்ரன் விநாயகர் சதுர்த்தியை எடுத்து நடத்தியதும், இதனால் ஏற்பட்ட கோபத்தில் மாற்று மதத்தினர் கொடூர கொலையை அரங்கேற்றியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதுமட்டுமல்லாது அம்மாவட்டத்தில் ஏற்கனவே இவர்களால் பல பிரச்சனை நடந்த போதிலும், சரிவர எடுக்கப்படாத நடவடிக்கையால் இன்று இத்துயர் அரங்கேறியுள்ளது என்றும், ஏற்கனவே அம்மாவட்டத்தில் பெண்களை ஏமாற்றிய வழக்கு மற்றும் பெண்களின் அலைபேசியை ஹேக்கிங் செய்தது போன்ற வழக்குகளில் சிக்கியுள்ளதும் இவர்கள் தான் என்றும் கூறுகின்றனர்.
இந்த கொடூர துயரத்தில் பலியான இளைஞரின் மரணத்திற்கு நியாயம் கேட்டு நெட்டிசன்கள் இணையத்தளத்தில் தொடர்ந்து தங்களின் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 2019 ஆம் வருடத்தில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் திருப்புவனம் பகுதியில், பாட்டாளி மக்கள் கட்சியினை சார்ந்த இராமலிங்கம் என்பவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், கொடூர செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எந்த விதமான பாகுபாடும் இன்றி கடுமையான தண்டனைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இராமநாதபுரத்தில், செல்போனில் ஹேக்கிங் சாப்ட்வேர்.. விதவை பெண்கள் டார்கெட்.. காமுக கும்பலின் பரபரப்பு வாக்குமூலம்..!!
Tamil online news Today News in Tamil
English Summary
Ramanathapuram Youngster Arun Prakash Murder