பெண்களை டார்கெட் வைத்து சீரழித்த கும்பல்.. கோவை, நாகர்கோவில் கோஷ்டியை மிஞ்சிய கொடூரங்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சத்திரக்குடி வீரவனூரை சேர்ந்த 25 வயது திருமணமான பெண், தனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் தனியாக புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்குள்ள பூவிளக்குபுத்தூர் பகுதியில் தனது அத்தை மகனுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.. இந்த நேரத்தில், அங்கு காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், அவர்களை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். 

பின்னர் கணவனை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் காதலா? என்று கூறி, இந்த வீடியோவை கணவனிடம் அனுப்பி விடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன இருவரையும் காரில் கடத்திச் சென்று, அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறித்து விட்டு நடு வழியில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். இதன் பின்னர் இருவரையும் மிரட்டி பலமுறை அந்த கும்பல் பணம் பறித்த நிலையில், பெண்ணின் உறவினர் மூலமாக இந்த விஷயம் ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளருக்கு தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்த நிலையில், இந்த விஷயத்தில் ஈடுபட்ட முகம்மது, இளஞ்செழியன், பாண்டி, தனசேகரன், காளிதாஸ், விஷ்ணு உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அலைபேசிகளில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது. 

இது குறித்து இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இரு சக்கர வாகனங்களில் தனியாக வெளியே வரும் மாணவிகள் முதல் திருமணமான பெண்கள் வரை என அனைவரையும் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த கும்பல் முதலில் பெண்ணின் பின்புலம் மற்றும் குடும்ப விபரம் குறித்து நோட்டமிட்டு, இளம் வயதில் காதலில் விழும் மாணவிகள், கணவர் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் குடும்ப பெண்கள் போன்றோரை பின் தொடர்ந்து, பெண்கள் தனது காதலருடன் இருக்கும் நேரத்தில் மறைந்திருந்து படம் பிடித்து வந்துள்ளனர். 

பின்னர் அந்த பெண்கள் தனியாக செல்லும் நேரத்தில், வீடியோவை காண்பித்து மிரட்டி நகை மற்றும் பணத்தை மிரட்டி வாங்கி வந்துள்ளனர். இதில் கணவனைப் பிரிந்த பெண்ணாக இருக்கும் பட்சத்தில், அவர்களை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிய வந்துள்ளது. இவர்களிடம் சிக்கிய பல விதவைப் பெண்களை வீடியோ எடுத்து வைத்து பல முறை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். 

பொள்ளாச்சி பாலியல் குற்ற சம்பவம் போலவும், நாகர்கோயில் காமுகன் காசி சம்பவம் போலவும் இந்த கும்பல் தினமும் பெண்களை மிரட்டி பணம் பறித்து பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்துள்ளது. இது மட்டுமல்லாது இவர்கள் அங்குள்ள வனப்பகுதிகளில் முயல் போன்ற விலங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட வீடியோக்களும் கிடைத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கும் பட்சத்தில், பல கொடூர கும்பல்களால் பல பெண்களின் வாழ்க்கையை பாதுகாக்கலாம் என்றும், புகார் அளிக்கும் பெண்களின் ரகசியம் காக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெண்கள் முடிந்தளவு தங்களின் இல்லங்களில் நடந்த பிரச்சனையை கூறினால் வீட்டார்கள் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வார்கள்.. வீட்டிற்கு பயந்து பல விபரீத கும்பலிடம் சிக்கி உங்களின் வாழ்க்கையை அனுதினமும் நரகம் ஆக்காதீர்கள்.. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram sexual abuse gang arrest by police


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->