பரபரப்பு..! இருதரப்பு பிரச்சனையை விசாரிக்க சென்ற காவல் அதிகாரிக்கு அரிவாள் வெட்டு..!!
Ramanathapuram RS Mangalam Police Officer Tamil Selvan Murder Attempt by Culprit During Investigation Process
இருதரப்பு பிரச்சனையை விசாரணை செய்ய சென்ற சார்பு ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் மங்கலம், அனிச்சங்குடி கிராமத்தில் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழிபாடு செய்வது தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சனை நடந்து வந்துள்ளது. இந்த நிலையில், ஆர்.எஸ் மங்கலம் அதிமுக ஒன்றிய செயலாளர் நந்திவர்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.
இதன்போது, அங்கு துரைராஜ் என்பவர் கோவிலில் பூஜை செய்து பிரசாதம் வழங்கிய நிலையில், இதனைகவனித்த மற்றொரு தரப்பை சார்ந்த மலைராஜ், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து துரைராஜிடம் தகராறு செய்துள்ளார். இந்த தகவல் ஆர்.எஸ் மங்கலம் காவல் துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தமிழ்செல்வன் கோவிலுக்கு சென்ற நிலையில், அவர் நடந்தது என்ன என? விசாரணை செய்துகொண்டு இருந்துள்ளார். இதன்போது, திடீரென மலைராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டவாரே, சார்பு ஆய்வாளர் தமிழ்செவனின் தலையில் அரிவாளால் வெட்டியுள்ளார்.
இந்த கொலை முயற்சி சம்பவத்தால் காயமடைந்த அதிகாரி தமிழ்செல்வன், இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். இதுகுறித்து காவல் சார்பு ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் மலைராஜை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Ramanathapuram RS Mangalam Police Officer Tamil Selvan Murder Attempt by Culprit During Investigation Process