நண்பனுக்கு உதவி செய்ததால் அரங்கேறிய பெரும் சோகம்... கடன் கொடுத்தவன் சட்டையை பிடித்ததால் பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி காந்திஜி தெருவை சேர்ந்தவர் பிரசன்னா. இவர் அப்பகுதியில் அரிசி கடை நடத்தி வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக நண்பர் ஒருவருக்கு, தனது உத்திரவாதத்தின் மூலமாக ரூபாய் இரண்டு லட்சம் கடன் வாங்கி வழங்கியுள்ளார். 

இவரது நண்பர் கடன் வாங்கிய பணத்த்திற்கு சரியாக வட்டி கட்டாத காரணத்தால், கொடுத்து கடனை திருப்பித்தரும்படி பிரசன்னாவை நெருக்கடிக்கு உள்ளாக்கி வந்துள்ளனர். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகிய பிரசன்னா, இன்று காலை 5 மணியளவில் தனது வீட்டில் இரு சக்கர வாகனத்தில் வெளியே புறப்பட்டு சென்று பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கி உள்ளார். 

இதனையடுத்து அங்குள்ள வைகை ஆற்றங்கரையோரம் சென்று, உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஒருகட்டத்தில் தீயின் வீரியம் தாங்க முடியாமல், அருகில் இருந்த தண்ணீருக்குள் விழுந்து தீயை அணைத்த நிலையில், தனது அலைபேசி மூலமாக காவல்துறையினருக்கு காப்பாற்ற கோரி தகவல் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த எமனேஸ்வரம் காவல்துறையினர், அவரை மீட்டு பரமக்குடி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரசன்னா 90 சதவீத தீக்காயத்துடன் உயிருக்கு போராடி வரும் நிலையில், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மதுரையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram Paramakudi Suicide attempt due to Friend Loan Authority Signature


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->