மனைவிக்காக செங்கல் சைக்கோவாக மாறிய நாகமுத்து.. அரங்கேறிய பரபரப்பு சம்பவம்.!
Ramanathapuram Paramakudi Neighborhood Fight 4 July 2021
பரமக்குடி அருகே இடத் தகராறில் கணவன் மனைவியாக அண்டை வீட்டாரை தாக்கிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி சோமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவரது அண்டை வீட்டார் நாகமுத்து. இவர்கள் இருவரும் அடுத்தடுத்த வீட்டில் வசித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே இடப்பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இதனால் வடிவேலின் மனைவி மற்றும் நாகமுத்துவின் மனைவிக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்படும் நிலையில், இருவரும் அவ்வப்போது வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று இரண்டு பெண்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒருவரை ஒருவர் தாக்கி இருக்கின்றனர்.
இதனால் வடிவேல் மற்றும் நாகமுத்து ஆளுக்கொருபக்கம் அரிவாளை கையில் எடுத்த நிலையில், உள்ளூரை சார்ந்தவர் எச்சரித்து வீடியோ பதிவு செய்ய தொடங்கியதால் அரிவாளை கீழே போட்டனர். பின்னர் பிரச்சினையை பெரிதாக்கிய நாகமுத்துவின் மனைவி பஞ்சவர்ணம் தாக்குதலுக்கு தயாராகி, கையில் மண்வெட்டியுடன் வடிவேல், அவரது தாய் சாவித்திரி ஆகியோரின் மீது கற்களை எரிந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்ற வடிவேல் மற்றும் அவரது மனைவி, மகன் என மூன்று பேர் மீதும் கற்களை வீசி தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் காயமடைந்த வடிவேலு, அவரது தாய் சாவித்திரி ஆகியோர் பரமக்குடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், வடிவேல் அளித்த புகாரின் பேரில் நாகமுத்து மற்றும் பஞ்சவர்ணம், இவர்களின் மகன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள எமனேஸ்வரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Ramanathapuram Paramakudi Neighborhood Fight 4 July 2021