வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை, 35 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் எடுப்பது சீரழித்த கொடூரம்..!
Ramanathapuram Paramakudi girl sexual abuse and forced Prostitution
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பரமக்குடி அருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர், இணையதள வகுப்புகளில் பங்கேற்பதற்காக பெற்றோரிடம் அலைபேசி கேட்டு அடம்பிடித்துள்ளார். பெற்றோர்களிடம் செல்போன் வாங்கி கொடுக்கும் அளவு வசதி இல்லாத காரணத்தால், காசு வந்ததும் வாங்கி கொடுப்பதாக கூறியுள்ளனர்.
இதனால் பெற்றோர்கள் மீது கோபமடைந்து, வீட்டை விட்டு வெளியேறிய மாணவி பரமக்குடி பேருந்து நிலையத்திற்கு சென்ற நிலையில், சிறிது நேரத்தில் பெற்றோருக்கு தொடர்புகொண்டு கோவையில் தோழியுடன் வேலைக்கு செல்வதாக கூறி உள்ளார்.
இதனையடுத்து பெற்றோர் அந்த மாணவியை தேடவில்லை. இந்நிலையில், சுமார் 35 நாட்கள் கழித்து, மிகவும் உடல் மெலிந்த நிலையில் அந்த மாணவி வீட்டிற்கு திரும்பியுள்ளார். அவருக்கு உடல்நிலை கடுமையாக பாதிப்படைந்த நிலையில், அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் கடுமையான பாலியல் அத்துமீறல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளனர். பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததும், அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வீட்டிலிருந்து வெளியேறிய மாணவி பரமக்குடி பேருந்து நிலையத்திற்கு சென்ற நிலையில், எங்கே செல்வது என்று தெரியாமல் இருந்துள்ளார். இதனை கவனித்த பழ வியாபாரி நீலாவதி என்ற பெண்மணி, சிறுமியிடம் பேச்சுக் கொடுத்து அவரிடம் அலைபேசி வாங்கி தருவதாக ஆசை காட்டி ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார்.
மேலும், தன்னை பெற்றோர்கள் தேடுவார்கள் என்று மாணவி கூறிய நிலையில், கோவையில் உள்ள தோழி வீட்டிற்கு வந்து இருப்பதாகவும், அங்கு வேலைக்கு சேர்ந்து பணியாற்றப் போவதாகவும் அவர்களிடம் கூறிவிடு என்று நீலாவதி பொய் சொல்ல வைத்துள்ளார். பின்னர், சுமார் 35 நாட்களில் சிறுமியை அறையில் அடைத்து வைத்து நீலாவதியும், அவரை சார்ந்தவர்களும் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து காளையார் கோவில் பகுதியை சார்ந்த பஞ்சவர்ணம், ஆட்டோ ஓட்டுனர் முனீஸ்வரன் ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Ramanathapuram Paramakudi girl sexual abuse and forced Prostitution