மோட்டார் கொட்டகையில் ஜக்புல ஜல்ஸ் கூத்து..! நேரில் பார்த்த மூதாட்டி., சுவரில் தலை, கீழே உடல்...!!
Ramanathapuram Paramakudi Aged Lady Murder by Illegal Affair Couple Police Arrest 1 May 2021
பரமக்குடியில் நகைக்காக மூதாட்டி கொலைசெய்யப்பட்ட வழக்கில் பேரதிர்ச்சி திருப்பம் ஏற்பட்டு, கள்ளக்காதல் ஜோடிகள் கைது செய்யப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி அரியனந்தல் கிராமத்தை சார்ந்த மூதாட்டி காளிமுத்தம்மாள் (வயது 92). இவர் தோட்டப்பகுதியில் உள்ள வீட்டில் தங்கியிருந்து வந்த நிலையில், வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவர் அணிந்திருந்த 18 சவரன் நகைகள் மாயமாகியிருந்தது.
இந்த கொலை தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, நகைக்காக அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில், மாவிலங்கை பகுதியை சார்ந்த வடிவேலு என்ற நபரை காவல் துறையினர் சந்தேகத்தின் கீழ் கைது செய்து விசாரணை செய்கையில், தோட்டத்தில் பணியாற்றி வந்த முத்துராக்கு என்ற பெண்மணிக்கும் - வடிவேலுவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது தெரியவந்தது.
இவர்கள் இருவரும் மோட்டார் கொட்டகையில் உல்லாசம் அனுபவித்துக்கொண்டு இருப்பதை மூதாட்டி காளிமுத்தம்மாள் எதற்ச்சையாக பார்த்துவிட்டார். இதனையடுத்து, மூதாட்டி ஊராரிடம் உண்மையை கூறிவிடுவார் என்று எண்ணிய கள்ளக்காதல் ஜோடி, மூதாட்டியை சுவற்றில் முட்ட வைத்து அடித்து கொலை செய்து, நகைக்காக கொலை அரங்கேறியதுபோல நகையை கொள்ளையடித்து சென்றுள்ளது.
இதனையடுத்து, கள்ளக்காதல் ஜோடியான வடிவேலு - முத்து ராக்கு ஆகியோரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Ramanathapuram Paramakudi Aged Lady Murder by Illegal Affair Couple Police Arrest 1 May 2021