காதல் திருமணம் செய்த பெண்மணி மர்ம மரணம்... உடலில் காயங்கள் என உறவினர்கள் புகார்..!
Ramanathapuram Pamban Man Daughter Monika Love Marriage Mystery Death at Husband Home within 3 Months
காதல் திருமணம் செய்த பெண்மணி மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலில் காயம் இருப்பதாக பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன் சேதுபதி நகர் பகுதியை சார்ந்தவர் இராமர். இவரது இரண்டாவது மகள் மோனிகா (வயது 18). இவர் கடந்த 4 வருடமாக ஏர்வாடியில் தங்கியிருந்துள்ளார். இதன்போது, ஏர்வாடி அருகேயுள்ள பழஞ்சிறை பகுதியை சார்ந்த தர்மராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்த விஷயம் மோனிகாவின் வீட்டிற்கு தெரியவரவே, அவர்கள் மோனிகாவை கண்டித்து இருக்கிறார். இருந்தபோதிலும், காதலில் உறுதியாக இருந்த மோனிகா, தர்மராஜ் மட்டுமே நான் திருமணம் செய்வேன் என உறுதிபட தெரிவித்துள்ளார். இந்நிலையில், மோனிகாவை தர்மராஜ் பழஞ்சிறைக்கு அழைத்துச்சென்று, கடந்த மே 28 ஆம் தேதி திருமணம் செய்துள்ளார்.
இந்த நிலையில், மோனிகா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலை அறிந்ததும் பழஞ்சிறைக்கு விரைந்த உறவினர்கள், மோனிகாவின் உடலை பார்த்து கதறியழுதனர்.
மேலும், அவரது உடலில் காயங்கள் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ள நிலையில், மோனிகாவின் இறப்பில் மர்மம் இருப்பதாக கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோனிகா காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், திருமணம் முடிந்த 3 மாதத்தில் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Ramanathapuram Pamban Man Daughter Monika Love Marriage Mystery Death at Husband Home within 3 Months