மண்டபம் மீனவர்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி விரட்டிய சிங்கள கடற்படை வெறியாட்டம்.!
Ramanathapuram Mandapam Fisherman Threatening by SriLanka Navy
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் பகுதியை சார்ந்த மீனவர்கள் சுமார் 9 பேர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் அங்குள்ள மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருக்கையில், அங்கு இலங்கை கடற்படையினர் வந்து மீனவர்களை அச்சுறுத்தியுள்ளனர்.
மேலும், துப்பாக்கி சூடு நடத்தி மீனவர்களை அங்கிருந்து விரட்டியதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்க சென்ற இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்திய நிலையில், துப்பாக்கி சூட்டில் உயிர்பிழைத்த மீனவர்கள் மண்டபனம் கரைக்கு திரும்பியுள்ளனர்.
மீனவர்கள் மீன்பிடித்த படகு மீது குண்டு துளைத்த அடையாளமும் இருக்கிறது. இந்த தகவல் தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மீனவ கிராம மக்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல மீண்டும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டா துறைமுகத்தை சீனா விரிவுபடுத்தி வரும் நிலையில், இலங்கை கடற்படையின் அத்துமீறல் திடீரென அதிகரித்து இருக்கிறது. மேலும், கடந்த 3 ஆவது நாளாக துப்பாக்கி சூடு நடைபெறுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Ramanathapuram Mandapam Fisherman Threatening by SriLanka Navy